வியாழன், 15 ஆகஸ்ட், 2013

உளறல்கள் 


இன்றைய பதிவில் நான் எழுதுபவை
2009 வாக்கில் தோணுறதை எல்லாம் குறிச்சு வைப்போம்னு
வெச்சது (இதுக்கு காரணம்லாம் மறந்து போய்டுச்சு so  கேக்ககூடாது ok )

=======================================================
என் பேச்சுக்கள்
எல்லோர்க்கும்
புரிகிறது

யார்க்காக பேசுகிறேனோ
அவர்களை தவிர
=======================================================
 அடுத்தவர் சொல்லுமளவிற்கு
முட்டாளாக இருப்பதை விட

அடுத்தவர்க்கு சொல்லுமளவிற்கு
புத்திசாலியாக இருப்பது

வருத்த படவேண்டிய விஷயம்தான்
பல சமயங்களில்
=======================================================
நாலு பேருக்குள்ளும்
அதே ரத்தம்தான்

பிறகேன் நான் மட்டும்
இவ்வளவு தடம் மாறி கிடக்கிறேன்
=======================================================
என் ஆனந்தம்
என் பரவசம்
என் நிம்மதி
என் திருப்தி
என் துள்ளல்

அவர்கள் கண்டதில்லை

அது போலவே
என் கண்ணீரும்
=======================================================
கடற்கரையாக
இருப்பதிலும்
சிரமங்கள் உண்டு

பெரும்பாலும்
உயிரற்றவைகளே
கரை ஒதுங்குகின்றன
=======================================================
பிரிவு
உறவுகளை பலப்படுத்தும்

உறவு ?
=======================================================
கேள்விகளை
நான் வெறுக்கிறேன்

என்னிடம்
பதில் இல்லாதபோது
=======================================================
எல்லா கேள்விகளுக்கும்
பதில் எதிர்பார்க்காதே

உன்னிடம் வர விருப்பமுள்ள
பதில்கள் மட்டுமே
உன்னை வந்தடையும்
=======================================================
கேள்விகள்
பெரும்பாலும்
பூதங்கள்

பதில்கள்
சில சமயங்களில் மட்டும்
=======================================================
கணவன் மனைவியருள்
இரண்டு விஷயங்கள்
ரொம்ப முக்கியம்

ஒன்று
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது

இரண்டாவது
புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்
புரிந்து கொண்டது போல நடிப்பது

(கண்டு பிடிக்க இயலாத அளவுக்கு )
=======================================================

பாடம் நடத்துவதில்
எனக்கு
விருப்பம் இருந்ததே இல்லை

என்ன செய்வது

என்னை சுற்றிலும்
மாணவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்
=======================================================
கதாநாயகனாகவே
செத்து விடுவது நல்லது

இல்லையென்றால்
நீ வில்லனாவதை
நீயே பார்க்க வேண்டும்
(இது என் கருத்து இல்லை -ஒரு படத்தில் வந்தது  )
=======================================================
விதிகள் சரித்திரமாவதில்லை

விதிகள்
உடைக்கபடுவதுதான்
சரித்திரம்

எப்படியோ
சரித்திரம் தோன்ற
விதிகள் அவசியம்
=======================================================
வாழ்க்கை
எப்படி வேண்டுமானாலும்
ஆரம்பிக்கிறது

ஆனால்
கேள்விகுறியோடு மட்டுமே
முடிகிறது
=======================================================
இளமையில்
வறுமையெல்லாம்  கொடுமையில்லை

முதுமையில்
பெற்றவர்களோடும்

மழலையில் நீ

பெற்றவர்களோடும்

இருக்க முடியாததுதான்
(எனக்கு )

=======================================================




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக