உளறல் -2
உன் மீதோ
என் மீதோ
எல்லாவற்றுக்கும்
காரணம் சொல்லி கொள்வதே
நாம் இன்னும் நம்மை
இரண்டு பேராகவே
நினைப்பதுதான்
=======================================================
புண்ணை
மூடி மூடி வைத்தால்
அது சீழ் பிடித்து நாறிடும்
அது போலதான்
பிரச்னைகளும்
=======================================================
வார
பட்டினி
கிடப்பவனிடம்
தத்துவம்
பேசக்குடாது
=======================================================
நம்மை
புரிய வைக்க
நாம் செய்யும்
அத்தனை முயற்சிகளும்
தோல்வி அடையும்போது
சரணடைவதைதான்
தாம்பத்தியம் என்கிறோம்
=======================================================
புத்திசாலிகள்
சமாதானம் பேசி
தோல்வி அடைகிறார்கள்
முட்டாள்கள்
சண்டை போட்டு
ஜெயிக்கிறார்கள்
=======================================================
யாருடைய கருத்தும் ஒத்து போக விட்டால்
நம்மை நாமே
சமரசம் செய்து கொள்வதைத்தான்
சமாதானம் என்கிறோம்
=======================================================
குழந்தைகள் குழந்தைகளாகவே
இருக்கும்வரை
பெற்றவர்களின் கனவுகள்
சிதைவதில்லை
குழந்தைகள்
குழந்தைகளாகவே
இருப்பதில்லை
=======================================================
சில வருடங்களுக்கு முன் ஒரு பெண் என்னை கேட்டாள்
அவன் ஏன் என்னை
ஏமாற்றி போனான்
இப்பொது ஒரு பையன்
என்னிடம் கேட்டான்
அவள் ஏன் என்னை
ஏமாற்றி போனாள்
அவர்கள் அப்டியேதான்
இருகிறார்கள்
இவர்கள் மூன்றாவது கூட்டம்
புரிந்து கொள்ள தெரியாதவர்கள்
=======================================================
தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கையில்
எல்லோர்க்கும்
ஒரு தேவதூதன்
தேவை படுகிறான்
=======================================================
பிரச்னைக்கு தீர்வு காண இயலாதபோது
தற்காலிகமாக
தப்பித்து கொள்ள
ஒரு வழிதான்
தியானம்
=======================================================
தியானத்தை விட நிம்மதி குறைய கூடியதான
விஷயங்களை
தவிர்ப்பது நல்லது
=======================================================
சேர்ந்து போவதற்கும் பொய் சேர்வதற்கும்
கணக்கில்லா
வித்தியாசம் உள்ளது
=======================================================